Saturday, 20 July 2013

கல்கியில் பிரசுரமான என் முதல் கவிதை... 


நீயாகத்தான் வாழ்ந்தேன்..

என்னை விட்டு 
உன்னிடம் வந்த நான்
என்னில் இருக்கும் போதும் 
நீயாகத்தான் வாழ்ந்தேன்... 
உன்னைச் சேர்ந்த போது 
தான் தெரிந்து கொண்டேன்... 
நேர்த்தியாய்ச் 
சொல்லப்படுவதில் 
ஜெயிக்கத் தொட‌ங்குகிறது 
நம் எண்ணங்கள்..



ஜூலியட்




Tuesday, 19 February 2013

உன்னுள் துளைக்கவா 
என் காற்றை 
வருடும் உன் விரலால்
கண்கள் 
எட்டும் தூரம் தான் 
நீ இருப்பது..! 
என் விரல் கூட 
தொட முடியல..!

காரணங்கள் தெரியப்படவே
...........பேசினேன்
பிழையிருப்பின்
என் தவறை மன்னித்து 
ஏற்கவும்..!

Monday, 18 February 2013

அழைத்தேன் உன்னை
ஆவலாய்.. 
வாய்ப்பளிக்கவில்லை
எனக்கு உன்
விருப்பமற்று
பேசியதால்..
நன்றி என் அழைப்பை
ஏற்றதற்கு..

ஏமாந்து தான் 
போனேன் நான் 
உன் அன்பால்..

நிதானித்த அந்த 
நொடிகள் 
ஆயிரம் வார்த்தைகள் 
பேசப்பட்டன‌


எங்களை இணைத்த பாடல் இது

இதயம் ஒரு கோயில் அதில்
உதயம் ஒரு பாடல் இதில்
நான் உன் ஜீவனே
இசையை மலராய் 
நாளும் சூட்டுவேன்...
(இதயகோயில்)