Tuesday 15 January 2013

உன் நினைவுடன் நான்



உனக்கும் எனக்கும் அப்படி என்ன‌ஆகி விட்டது..அளவிட முடியாஅன்பை பரிமாறிஆசையோடு பேசிய‌தருணங்களைமறந்து போக...இல்லை இல்லைஅப்படி ஒருஎண்ணமே வேண்டாமேஎப்போதும் உன்
நினைவுடன் நான்
நீயும் அப்படியே
இருப்பாய் என்று
நம்புகிறேன்






வெளிச்சத்தின் வார்த்தைகள்: ஒளிக் கற்றைகள்

வெளிச்சத்தின் வார்த்தைகள்: ஒளிக் கற்றைகள்




வீழ்ந்தன
என் மேல்
பனித்துளிகள்
ஒளிக்கற்றைகள்
விழுந்ததால்

Saturday 12 January 2013

யோசிக்கத் தோன்றுகிறது







நான் செய்யும் எதுவும் 
எனக்கே புரியவில்லை... 
என்ன செய்வதென்றே 
தோன்றவில்லை...
யோசிக்கத் தோன்றுகிறது
உன்னைப் பற்றியே...

ஆசை




என்னைப் பார்த்து 
சிரிக்கிறாள்
வாயின் தேன் 
ஒழுகும் வரை
அமிர்தம் பருகிடத் 
துடிக்கும்
ஆசை 
யாரை விட்டது          

அன்பின் அர்த்தங்கள்







கண்ணீர் மல்கி 
நிற்கிறேன்..
அன்பைப்
 பெற 
முயல்கிறேன்..


வீசிய 
வார்த்தைகள்
விதை
ஆகிப் போனதை
அறியாயோ...?

அன்பின் அர்த்தங்கள் 
சொல்லும் 
உன் பார்வைகள் 
ஆயிரம்..


அதை ஏன் 
மறைக்கிறாய்..
ஒத்துக் கொள்ள 
மறுக்கிறாய்..!



அலைபேசி, 

தொலைபேசி,

மின்னஞ்சல், 

வலைப்பதிவு



எங்கும்... 

தேடுகிறேன் உன் 
தகவல்களை...

சொதப்பல்







கவிதையில் சொன்ன 

உன் காதலை...
ஏற்றேன் பேர்வழி 
என்று நானும்...

கவிதை சொல்ல
முற்பட்டு... 
சொதப்பலுடன்
சொன்னேன் 
என் காதலை...!

அன்பாய்...





குயவன் அன்பு செலுத்தும் 
களிமண்
அவன் அன்புக்கு கட்டுப்படும்
பாத்திரமாய்... 

தச்சன் அன்பு செலுத்தும் 
மரக்கட்டை
அவன் அன்புக்கு கட்டுப்படும்
சாமானாய்...

கணவன் அன்பு செலுத்தும் 
மனைவி
அவன் அன்புக்கு கட்டுப்படும்
அன்பாய்...

என்னவனுக்கு சமர்ப்பணம்

கவிதை உள்ளம் 
கொண்ட கவியரசே 
கற்பனை நயம் 
கொண்ட கலையே 

ஒரு சொல் 
பொருள் தரும்
உன் கவிதை

கற்பனை அல்ல - நிஜம் 
உனது கற்பனை


கவி சொல்லும்
கலையை உன்
வார்த்தைகள் 


சொல்லும்
கவியாய்


வேறொன்று

எண்ணம் ஒன்று
செயல் ஒன்று
பார்வை ஒன்று

அன்பு ஒன்று
உள்ளம் ஒன்று
உணர்வு ஒன்று

நீ ஒன்று
நான் ஒன்று

நாம் ஒன்று

எல்லாம் ஒன்றாகிப் 


போனப் பின்
நாம் வேறாக 

வாய்ப்பே இல்லை



கவிதை எங்கே..?


எனக்கு மட்டுமே 

சொந்தமான‌
உன் கவிதைகள்
எங்கே...?



சொல்லி விடு..


சொல்லி விடு.. 
என்ன சொல்ல 
வந்தாய்..

என்னை பிடிக்கும் 
என்றா? 
இல்லை பிடிக்காது 
என்றா?


சொல்லி விடு
எதுவாயினும்... 


உரிமையோடு
ஏற்கிறேன்.. 


அது எனக்கானவை 
மட்டுமே...

என் உயிர்...

கண்டு 
கொள்ளாமல் 
விட்டு விட 
நீ வேறு 
ஒருத்தன் 
அல்ல‌

என் உயிர்...
உயிரின் 
உயிர்...


பரவசம்

பார்த்ததும்
பரவசம்
உள் வந்த 
சந்தோஷம்
கண்களில் 
கண்ணீர்

எப்போதும் என்னுடன்

மறந்தே போய் விட்டேன்
நீ என்னுடன் 
பேசாத தருணங்கள்
விலகிச் சென்ற நாட்கள்
இப்படி...
எல்லாவற்றையும் 

நீ எப்போதும்
என்னுடன் இருப்பதால்



எனக்கான அன்பு

எங்கே ஒளித்து 
வைத்துள்ளாய்
எனக்கான 
உன் அன்பை

காணாத சில 
காலம்
கண்டெடுக்க 
முயல்கிறேன்

புதைத்து விட்டேன்

எனக்கே எனக்கான 
கவிதைகளை
மறைத்து தான் கொடுத்தாய்

மறைத்து நான் வைத்தேன்‍‍ ‍- என்னுள்

எங்கேயும் தவறி 
விடக் கூடாதென்று
என்னுள்ளேயே 
புதைத்து விட்டேன்

காத்திருக்கிறேன் உனக்காக...

செல்லமாய் அடித்த அடிகள்
போட்ட சண்டைகள்
காட்டிய கோபங்கள்
விலகிச் சென்ற நேரங்கள்
இதையெல்லாம் தாண்டி...

எனக்கு மட்டுமேயான‌
நெருக்கமான தருணங்கள்
அன்பின் வார்த்தைகள்
காட்டிய பரிவுகள்
சிலதாயினும்...

எதையும் மறக்கவில்லை நான்
மறக்கவும் முடியாதவை அவை

காத்திருக்கிறேன் உனக்காக...
உன் வரவுக்காக‌...
எப்போதும்

பண்டிகை

எப்போதும் பண்டிகைக்கு
ஒரு புது துணியாவது 
கிடைத்து விடும்
ஆனால் இந்த வருடம் 
ஒன்று கூட் 
கிடைக்க வில்லை

அதற்கு யார் காரணம்?

வறுமை என்று சொல்வதா?
இல்லை
இயலாமை என்று சொல்வதா?
இல்லை
இந்த வருடம் அப்படித்தான்
என்று சொல்வதா?

தெரியவில்லை...!


சேர்ந்து வாழ...




சண்டை போட 
ஆயிரம் காரணம் 
இருக்கலாம்
ஆனால் ...
சேர்ந்து வாழ 
ஒரு காரணம் போதும்
அது ..
அன்பு மட்டுமே...

 


புதுமையாய் 
ஒரே முறை 
வரும் 2013
சட்டென்று 
வந்தது 
ஒரே நாளில்

பழைய 
விஷயங்களை
புதுமையாய் 
எதிர்கொள்வோம்

புத்தாண்டு 
வாழ்த்துக்கள்
உங்கள் 
அனைவருக்கும்